ஒரே நாளில் 97,894 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51.18 லட்சத்தை தாண்டியது: இதுவரை 83,198 பேர் பலி.!!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 51.18 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 83 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 97,894 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,18,254 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,132 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 82,719 பேர் குணமடைந்துள்ளனர்;

.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 40,25,079 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,09,976 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 78.64% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.63% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.73% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,36,613 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 6,05,65,728 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

    

மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 297506 ; குணமடைந்தோர் : 792832; இறப்பு : 30883

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46633 ; குணமடைந்தோர் :  464668 ; இறப்பு : 8559

    

டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 30914 ; குணமடைந்தோர் : 194516 ; இறப்பு : 4839

கேரளா : சிகிச்சை பெறுவோர் : 32775 ; குணமடைந்தோர் :84608 ; இறப்பு :  480

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 101645 ; குணமடைந்தோர் : 375809 ; இறப்பு : 7536

    

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 90279 ; குணமடைந்தோர் : 497376 ; இறப்பு : 5105

Related Stories: