ராமேஸ்வரம்: புரட்டாசி மகாளய அமாவாசைக்கு அனுமதி இல்லாததால் அமைதியானது அக்னி தீர்த்தம் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளான இன்று ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பக்தர்கள் கூடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.