காப்பர் தொழிற்சாலையில் போர்க்லிப்ட் மோதி மூதாட்டி பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பழம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்காளம்மள் (61) . இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை 10 மணிக்கு பணிக்கு வந்த அவர் போர்க்லிப்ட் மோதி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்தார். இதையறிந்த சக தொழிலாளிகள் செங்காளம்மளை கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். இதை அறிந்த ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் கிராமப்புற மக்களோடு தொழிற்சாலை முன்பு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு நிர்வாகம் ரூ. 6 லட்சம்  தருவதாக கூறியதை அடுத்து கூட்டம் கலைந்து சென்றது.

Related Stories: