வாலிபர் மர்மச்சாவு

செய்யூர்,: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ராம்குமார் (35). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் கூலி வேலைக்கு செல்வதாக கூறி சென்ற ராம்குமார், சென்னையில் பல பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார். இதுதொடர்பாக, சில மாதங்களுக்கு முன் போலீசார், ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ராம்குமார், கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர், கடந்த 12ம் தேதி சித்தாமூர் அடுத்த ஜமீன் எண்டத்தூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். அங்கு 2 நாட்கள் தங்கிய அவர், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டில் தூக்கில் சடலமாக கிடந்தார்.

இதை பார்த்ததும், அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சித்தாமூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.

Related Stories: