டெல்லி: காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில, பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 2020 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7 வரையிலான காலகட்டத்தில் 778 கி.மீ., தூரம் கொண்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் 198 கி.மீ., தூரமுள்ள சர்வதேச எல்லைப்பகுதியிலும் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 242 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.