காஞ்சிபுரம்: காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஊராட்சி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தெரிவித்ததாவது. நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களின் நல்லாதரவோடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பொதுச் செயலாளர் துரைமுருகன், புதிய பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும், துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஊராட்சி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தகவல்
- காஞ்சி வடக்கு மாவட்டம்
- ஆர்வலர்கள்
- பஞ்சாயத்து
- திமுக
- மாவட்ட செயலாளர்
- நிறைவேற்றுக் குழு கூட்டம்
- சட்டசபை தேர்தல்கள்