நடிகர், நடிகைகள், விஐபிக்கள் தொடர்பு போதை விற்பனை விசாரணை போலீசாருக்கு முழு சுதந்திரம்

பெங்களூரு: ‘‘கர்நாடகாவில் போதை பொருள் வழக்கு இனிவரும் வாரங்களில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வழக்கை விசாரணை நடத்தி வரும் போலீசாருக்கு எந்த  அரசியல் நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை’’ என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ்  பொம்மை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம்  தொடர்பாக நடிகைகள் உள்பட பலரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் பல்வேறு ரகசிய தவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் எந்தெந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்கள் அடங்கியுள்ளது. விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இருப்பதால் யார் யார், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் மேலும் சில முக்கிய பிரமுகர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க சி.சி.பிக்கு முழு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எந்தவிதமான அரசியல் நெருக்கடியும்  கொடுக்க ப்படவில்லை என்றார்.

Related Stories: