போதை பொருள் வழக்கில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் சிக்குகின்றனர்: ரியா கொடுத்த பகீர் வாக்குமூலம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, போதை பொருள்களை வாங்கியதும் அவற்றை சுஷாந்துக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது. தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரியாவிடம் 3 நாட்களாக விசாரணை நடத்திய பிறகு அவரை கைது செய்தனர். நடிகை ரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் 20 பக்க வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் அந்த வாக்குமூலத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், துணை நடிகர்கள் என 25 பேரின் பெயர்களை கூறி அம்பலப்படுத்தி உள்ளதாகவும் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரியா குறிப்பிட்டுள்ள பெயர்களில் நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகை சாரா அலிகான் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு நடிகைகளும் தன்னுடன் சேர்ந்து போதை பொருள் பயன்படுத்தி இருப்பதாக ரியா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தமிழில் என்ஜிகே படத்தில் சூர்யா ஜோடியாகவும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தி ஜோடியாகவும் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான். பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்பட மேலும் பல திரையுலகினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories: