உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுபினாயூர், பென்னலூர், தண்டரை ஆகிய கிராமங்களில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 26 பழங்குடியின குடும்பங்களுக்கு பசுமை வீட்டுக்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.முத்துக்குமார் கலந்து கொண்டு பசுமை வீட்டுக்கான பணி ஆணையினை வழங்கினார். முன்னதாக பழங்குடியின மக்கள் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.