திருவில்லிபுத்தூர் : குலதெய்வம் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று வந்தார். அவரை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் வரவேற்றனர். தொடர்ந்து அவர் ஆண்டாள் சன்னதி, கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்தார்.