வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பாநேரியை சேர்ந்தவர் மின்னலா (78), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இவரது மகன் முருகேசன் கொரோனா தொற்றால் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தாய் இறந்த தகவலறிந்த முருகேசன் கதறி அழுதார். தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கதறினார்.