மதுரை: மறைந்த சில நாட்களில் மறந்து விடுவோர் மத்தியில், மரணித்துவிட்ட அன்பு மனைவிக்கு முழு உருவ சிலையை அமைத்திருக்கிறார் மதுரையை சேர்ந்த சேதுராமன். மனைவி இறந்தும் வாழ்கிறார் என்ற வெளிப்பாடே இது என்கிறார் மதுரை ஷாஜகான். மின்னொளியில் புத்தம் புதிதாய் பளபளக்கும் 4 அடி சிலை. ஜொலிக்கும் பட்டுபுடவையுடன் புன்னகைக்கும் பெண்மணி. மறந்த தனது அன்பு மனைவிக்காக மதுரையை சேர்ந்த தொழிலதிபர் சேதுராமன் செய்த ஏற்பாடுதான் இவை. மேலப்பெண்ணாகரத்தை சேர்ந்த சேதுராமன் 48 ஆண்டுகளுக்கு முன்பு அதலைக் கிராமத்தை சேர்ந்த பிச்சைமணி என்பவரை கரம் பிடித்தார். 48 ஆண்டுகாலம் சேதுராமன்-பிச்சைமணி ஜோடி இணைபிரியாமல் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி பிச்சைமணி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் சேதுராமனை தனிமை தொற்றி கொண்டது.