சேலம்: சேலம் மண்டல உழவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த நேரத்தை சாதகமாக்கி, கிசான் திட்டத்தில் முறைகேடுகளை நடத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் சில விஷமிகள், ரூ.1000 கொடுத்தால் ரூ.6ஆயிரம் அரசு நிதியுதவி கிடைக்கும் என்ற இந்த திட்டத்தை திரித்துக் கூறி, வசூல் செய்துள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கான நிதி என்று கூறாமல், தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் நிவாரண உதவித் தொகை என்றே குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் ஆளுங்கட்சியினர் கூட, இதற்காக முன்னின்று விண்ணப்பங்களை வாங்கி உள்ளனர்.