வால்பாறை: வால்பாறையை அடுத்து உள்ள கருமலை எஸ்டேட்டில் உள்ள ரேஷன் கடையில் நேற்று முன் தினம் பொது வினியோகத்திற்காக 9 டன் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பொருட்களை மகளிர் குழுவினர் இருப்பு வைத்து உள்ளனர். எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்தில் இருந்து வந்த 6 யானைகள் ரேஷன் கடையையின் சுவற்றை நேற்று அதிகாலை உடைத்து, 1 மூட்டை அரிசியை எடுத்து வெளியே போட்டு சாப்பிடத்துவங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.