கோவை: இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை புத்துயிரூட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் அல்லது வேளாண் காடு முறையை ஊக்குவிப்பது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். மண் மற்றும் நீர் வளத்தை பெருக்குவதற்கும், மக்களின் உணவுமுறையில் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை கையாள்வதற்கும் மரம் சார்ந்த விவசாயம் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை சத்குரு விளக்கமாக பேசினார்.