ஊட்டி: ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் தீ விபத்தால் சேதமடைந்த இடத்தில் புதிதாக ரூ.50 லட்சத்தில் கடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் 1300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த ஜூன் 22ம் தேதி நள்ளிரவு மார்க்கெட் வளாகத்தில் உள்ள சிறிய உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 80க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமடைந்தன. கடைகள் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீண்ட கால கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வியாபாரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி வியாபாரிகள் கடைகள் சேதமடைந்த இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களுக்கு புதிதாக கடைகள் கட்டி தர வேண்டும் என ேகாரிக்கை விடுத்தனர்.