சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் மிக குறைந்த அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகள் கீரை செடி, காய்கறி செடி வளர்ப்பு, சாமந்தி, மல்லிகை போன்ற பூச்செடிகள் வளர்ப்பு ஆகிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற தோட்டப் பயிர்களை விவசாயம் செய்யும்போது ஆட்செலவு, பண விரையம் இல்லை. சொட்டு நீர் பாசனத்திலும் பயிர் செய்யலாம். இதைப்போல சின்னசேலம் பேரூராட்சி சலவை நிலையம் எதிரில் ஒரு விவசாயி தனக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தில் சாமந்தி செடி பயிரிட்டுள்ளார். கடந்த சூலை மாதம் நடப்பட்ட செடியில் தற்போது சாமந்திப் பூக்கள் பூத்து குலுங்குகிறது.