தெஹ்ரான்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நேற்றிரவு ஈரானை சென்றடைந்தார். இதுதொடர்பாக டுவிட்டில் தகவல் தெரிவித்துள்ளார். சீனாவுடனான சமீபத்திய பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது ஈரான் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. தெஹ்ரானில், ராஜ்நாத் சிங் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்க உள்ளார். பாதுகாப்பு அமைச்சரின் திடீர் ஈரான் வருகை, பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளதாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.