ராமேஸ்வரம்: டீசல் விலை உயர்வு, மீன்களின் விலை சரிவினால் தொழில் நஷ்டத்தை சந்தித்து வரும் ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக கரை நிறுத்தப்பட்டுள்ளன. டீசல் விலையேற்றத்தினால் மீன்பிடி தொழில் சார்ந்த மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்பும் மீனவர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நஷ்டம் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகு மீன்பிடித்தொழில் நசிந்து வருகிறது.