மருத்துவமனையில் கேக் வெட்டி எஸ்.பி.பி திருமண நாள் கொண்டாடினார்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்டு 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு 30 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வந்தது. எஸ்.பி.பியின் மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண், தினமும் வீடியோ மூலம் தனது தந்தையின் உடல்நிலை குறித்து பேசி வந்தார். மேலும், தனது தந்தை குறித்து நாளை நல்ல தகவல் வரும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பார்க்க அவரது மனைவி சாவித்திரி மருத்துவமனைக்கு வந்தார். நேற்று அவர்களது 51வது திருமண நாள் என்பதால், சின்ன கேக் ஒன்றை எஸ்.பி.பி முன்னிலையில் வெட்டி திருமண நாள் கொண்டாடினார். இத்தகவல் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சாவித்திரியும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: