காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் தேக்வார் ஆகிய பிரிவுகளில் இன்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு இந்தியாவை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், அதனை மீறும் வகையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு உள்ளது.  எனினும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

Related Stories: