திருப்புவனம்: தமிழக அரசு அறிவிப்பின்படி செப்.1ம் தேதி முதல் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் திறக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக பக்தர்கள் சராசரியாக வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முன்னதாக ஊழியர்கள் பக்தர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து, உடல்வெப்ப பரிசோதனை, சானிடைசர் வழங்கிய பின் கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர். இங்கு பகல் ஒரு மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும். இதனை காண கூட்டம் அதிகரித்து விடும் என்பதால் முன்னதாகவே பக்தர்கள் கோயிலுக்கு வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.