காரியாபட்டி: காரியாபட்டி அருகே உறவினரான திருநங்கையை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோணுகால் வலையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறி, தனது பெயரை ஹரினா (24) என மாற்றிக் கொண்டார். அதே கிராமத்தை சேர்ந்த ஹரினாவின் தாய்மாமன் கருப்பசாமி (27). டிரைவரான இவர் ஹரினாவை காதலித்து வந்துள்ளார்.அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தனது பெற்றோரிடம் கருப்பசாமி கூறியுள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.