காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கிட்டேசம்பட்டி பகுதியில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மேய்ச்சல் நிலம் உள்ளது. இதில் சில ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற அதிகாரிகள், போலீசாருடன் பொக்லைன், டிராக்டர் போன்றவற்றுடன் நேற்று சென்றனர்.