கரூர்: கரூர் பஸ் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி இயந்திரம் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முன்பை விட தற்போது நாளுக்கு நாள் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது. தினமும் 20க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கரூர் பஸ் நிலைய வளாக பகுதியில் மக்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் வகையில் கிருமி நாசினி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.