தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. மழை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி தொற்று நோயை தடுக்கும் வகையில் கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த இந்த முகாமிற்கு குளித்தலை கால்நடை துறை உதவி இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்தார்.நாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் லதாராஜா, தோகைமலை வட்டார கால்நடை மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோகைமலை நாகனூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
- கால்நடைகளுக்கு கால்நடை தடுப்பூசி முகாம்
- டோக்காய்மலை நாகனூர்
- டோக்காய்மலை நாகனூர் நோய் தடுப்பூசி முகாம்