இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி அனுமதியின்றி பாம்புகளை பிடிக்கக் கூடாது. அந்த அடிப்படையில் அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகிய இருவர் மீதும் கோவை வனச்சரக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இதே போல் பொதுமக்கள் யாரும் உரிய அனுமதியின்றி பாம்பு மற்றும் வன விலங்குகளை பிடிப்பதோ அதனை வீடியோ பதிவு செய்வதோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
The post கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வித்தைக் காட்டி வீடியோ பதிவிட்ட இருவர் கைது appeared first on Dinakaran.