கீழக்கரை: கீழக்கரை பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழக்கரை வீதியில் காலையிலிருந்து மாலை வரை ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருக்கும் போது முட்டித் தள்ளி விடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் ஆங்காங்கே சாணங்களை போட்டு விடுவதால் துர்நாற்றம் வீசகிறது. ஆகவே நகராட்சி நிர்வாகம் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.