கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமிகோயிலில் உள்ளது. இங்கு, ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் அருள்பாலிக்கிறார். ஐதிகப்படி, நேற்று மதியம் 2.16 மணிக்கு ராகுபகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு உற்சவர் ராகுபகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.