பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: மகன் சரண் தகவல்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவரது மகன் சரண் தகவல் தெரிவித்தார். நானும் எனது சகோதரியும் இன்று அவரை சந்தித்தோம் என கூறினார். மேலும் சகோதரியைக் கண்டதில் தந்தை மகிழ்ச்சியுற்றார் என தெரிவித்தார். ஐ.சி.யூ.வில் உள்ள எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர், எக்மோ உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிசியோதரபி சிகிச்சைக்கு எஸ்பிபி உடல் ஒத்துழைப்பு தருகிறது எனவும் கூறியுள்ளது. உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கடந்த 5 ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக எஸ்.பி.பி சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 ஆம் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என மருத்துவ குழுவின் ஆலோசனையின் படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருடைய தற்போதைய உடல்நிலை சீராக உள்ளது எனவும், பல்துறை மருத்துவக் குழுவினரால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவகிறார் எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: