சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவரது மகன் சரண் தகவல் தெரிவித்தார். நானும் எனது சகோதரியும் இன்று அவரை சந்தித்தோம் என கூறினார். மேலும் சகோதரியைக் கண்டதில் தந்தை மகிழ்ச்சியுற்றார் என தெரிவித்தார். ஐ.சி.யூ.வில் உள்ள எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர், எக்மோ உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிசியோதரபி சிகிச்சைக்கு எஸ்பிபி உடல் ஒத்துழைப்பு தருகிறது எனவும் கூறியுள்ளது. உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.