அணைக்கட்டு: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் கள்ளச்சாராய கும்பல் தாக்கியதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அந்த கும்பலை பிடிக்க போலீசார் மலையை சுற்றி முகாமிட்டு தேடி வருகின்றனர். அதன்படி ஊசூரிலிருந்து அல்லேரி மலைக்கு செல்லும் பாதையில் அந்த கும்பல் உள்ளதா என நேற்று போலீசார் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் கள்ளச்சாராயம் கடத்தி சென்றவர்களை பார்த்ததும் போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர். சிவநாதபுரம் தாண்டி சென்ற அந்த நபர்கள் முடிந்தால் பிடியுங்கள் பார்ப்போம் என கூறியபடி சாராய மூட்டைகளுடன் தப்பி ஓடினர்.