புதுடெல்லி: கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் மெக்சிகோவை முந்தி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டில் கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 75,000க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதுவரை இந்த எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் காணப்படவில்லை. இன்னும் சில நாட்களில் நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் தொற்று அதிகரிப்பு உண்மையாக இருந்தாலும், நடப்பு மாதத்தின் துவக்கத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் குறைந்து வருகிறது. துவக்கத்தில் இருந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்த மாநிலங்களில் டெல்லியைத் தவிர மற்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய அளவைவிட தொற்று அதிகமாக இருக்கிறது.