பொன்னேரி: பழவேற்காட்டில் கடலும், ஏரியும் இணைந்த பகுதியில் சுமார் 45 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலாகும். இந்நிலையில், பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தை பழவேற்காடு வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு பழவேற்காடு மீனவர்கள் கடந்த ஓராண்டாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.