ஆலங்காயம்: ஆலங்காயம் அருகே பூத்துள்ள அரிய வகை பிரம்ம கமலம் பூவினை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆலங்காயம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் பிரம்ம கமலச் செடி வைத்து பராமரித்து வருகிறார். இதில், பிரம்ம கமலப் பூ நேற்றுமுன்தினம் இரவு பூத்தது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூவை அக்கம் பக்கத்தினர் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.