முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 14.1.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி புதிய திட்டமாக பத்திரிகையாளர் நல நிதியம் உருவாக்கப்பட்டது. அன்று அரசின் 1 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கிட வழி செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 19.7.2022 அன்று பிறப்பித்த அரசாணையின்படி பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியாக ரூ 2 இலட்சத்து 50 ஆயிரம் வரையும் பத்திரிகையாளர் ஓய்யூதியம் பெறுபவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதித் தொகையிலிருந்து 50 சதவிகித தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை அமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 6 பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவியாக மொத்தம் ரூ.10,01,206/-க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், செய்திமக்கள் தொடர்புத்துறை மூலமாக கடந்த 2021 முதல் தற்போது வரை பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 13 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.25,11,339/-ம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!! appeared first on Dinakaran.