அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு மாநில அரசின் உரிமை உறுதியானது: எஸ்டிபிஐ கட்சி தலைவர் கருத்து

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை:

ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில், கடந்த 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவு தமிழகத்தின் சமூக நீதிக்கு சான்று பகர்ந்துள்ளதோடு, கூட்டாட்சி அமைப்பில் மாநில அரசின் உரிமையை உறுதி செய்துள்ளது. இடஒதுக்கீட்டில் உள்இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்குகள் அனைத்தும் கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு மாநில அரசின் உரிமையை காக்க திறமையான சட்டப்போராட்டங்களை தொடர வேண்டும்.

Related Stories: