காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தணி கிராமத்தில் இருந்து நற்புதம் கிராமத்திற்கு செல்வதற்கு முன் உள்ள வளைவில் அபாயகரமான கிணறு ஒன்று இருக்கிறது. கிணற்றில் உள்ள தண்ணீரை குறுந்தணி மற்றும் நற்புதம் கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை வழியாக பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிகளவில் செல்கின்றனர்.