அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே அமைச்சக பணிகளை கவனிப்பார் : உள்துறை அமைச்சக அதிகாரி

டெல்லி : அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே அமைச்சக பணிகளை கவனிப்பார் என்று உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்காக டெல்லி, குர்காவனில் இருக்கும் மேதாந்தா மருத்துவமனையில் இந்த மாத துவக்கத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார். 15 நாட்களுக்கு பிறகு இவருக்கு நெகடிவ் என்று பரிசோதனையில் தெரிய வந்த பின்னர், வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்தார். வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த அமித்ஷா,  அதன்பின்னர் உடல் சோர்வு உள்ளிட்ட சில காரணங்களுக்காக கடந்த 18-ம் தேதி அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் தற்போது அமித்ஷா நலமுடன் இருப்பதாகவும், ஓய்வும் சிறப்புக் கவனமும் தேவைப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே அமைச்சக பணிகளை அவர் கவனிப்பார் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: