கூடுவாஞ்சேரி: திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் ஊராட்சி ராஜீவ்காந்தி நகரில் தனியார் செல்போன் டவர் அமைக்க, அந்நிறுவனத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த நிறுவன ஊழியர்கள் நேற்று காலை அப்பகுதிக்கு வந்தனர். இதையறிந்ததும், அப்பகுதி மக்கள் பொதுமக்கள் மேலைக்கோட்டையூர் - கீரப்பாக்கம் சாலையில் திரண்டனர். அங்கிருந்த செல்போன் டவர் நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, செல்போன் டவர் ஊழியர்கள், அங்கு டவர் அமைக்க மாட்டோம் என வெள்ளைத்தாளில் உறுதிமொழி சான்று எழுதி கொடுத்தனர்.