பழநி: பழநி நகர் முழுவதும் சீரமைப்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் மாற்று சாலைகள் குறித்து முறையாக திட்டமிடப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக பழநி நகரில் தற்போது ரூ.58 கோடி மதிப்பீட்டில் சாலையோர வடிகால் மற்றும் நடைமேடை அமைத்தல், சாலைகள் சீரமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக நகர் முழுவதும் ஒரே நேரத்தில் தோண்டி விடப்பட்டுள்ளன.