திருப்பூர்: திருப்பூருக்கு பனியன் துணிகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தது. திருச்சியிலிருந்து திருப்பூரை சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பனியன் துணிகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று காங்கேயம் சாலை வழியாக நேற்று திருப்பூர் வந்து கொண்டிருந்தது. அப்போது, நல்லூர் அருகே வந்தபோது லாரி நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.