விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!!

சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் விடுதியில் தங்கி இருந்த 2 பேரிடம் இருந்து சுமார் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தியதாக புதுச்சேரியை சேர்ந்த உபயத்துல்லா (22), வளசரவாக்கத்தை சேர்ந்த பிரிதிவிராஜ் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை எங்கிருந்து கொண்டு வந்தனர் என்பது குறித்து இருவரிடமும் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: