புதுடெல்லி: திருநங்கையர்களுக்கான கொள்கைகள், சட்ட திட்டங்களை உருவாக்க, மத்திய - மாநில அரசகளை சேர்ந்த தேசிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தவராக கருதப்படும் திருநங்கைகள், சமூகத்தில் ஏராளமான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு படிப்பு, வேலை உட்பட பல்வேறு உரிமைகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பெற்றோர்கள் மட்டுமின்றி, சமூகத்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, அவர்களின் வாழ்க்கை திசை மாறி, பாலியல் தொழில் செய்வது உள்ளிட்ட சட்ட விரோத வழிகளில் செல்கின்றனர்.இவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தடைகள் மற்றும் அதற்கு தீர்வு காண்பதற்காக திட்டங்கள், கொள்கைகளை வகுப்பதற்காக மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.