சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு பொதுஇடங்களில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.