மதுரை: கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாதவன், ஐகோர்ட் மதுரை கிளையில் காவிரியில் மணல் கடத்தலை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மணல் கடத்தலை முற்றிலும் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வழக்குகள் பதிந்தால் மட்டும் போதுமா? வாகனங்களை எப்போது பறிமுதல் செய்வீர்கள்? மணல் கடத்தலை தடுப்பது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.