கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும், மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது : முதல்வர் பழனிசாமி!!

வேலூர் : வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டி அளித்த அவர், கொரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக் கவசம் வழங்கப்படும்.திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.583.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் பிற பகுதிகளை சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது. மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரமாக இருந்த மானியத் தொகை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி டிசம்பரில் முடியும், என்றார்.

Related Stories: