விநாயகர் சிலை செய்யும் தொழிற்கூடங்களுக்கு சீல்: தொழிலாளர்கள் மறியல்

சென்னை: வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வாலாஜாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில்14 விநாயகர் சிலை செய்யும் தொழிற்கூடங்கள் அமைந்துள்ளன. இங்கு பெரிய அளவிளான விநாயகர் சிலைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, வாலாஜாபாத் தாசில்தார் மித்ராதேவி, மேற்கண்ட தொழில் கூடங்களுக்கு நேற்று சீல் வைத்தார். இதில், அய்யம்பேட்டை தொழிற்கூடத்துக்கு சீல் வைத்தபோது, அங்கிருந்த ஊழியர்கள், அதிகாரிகளிடம் சமரசம் பேசினர். ஆனால், அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையறிந்ததும் பாஜவினர் அங்கு சென்றனர். தொழிற்கூடங்களுக்கு சீல் வைக்க கூடாது என தாசில்தார் மித்ராதேவி, டிஎஸ்பி மணிமேகலை ஆகியோரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை. இதனால், ஆத்திரதடைந்த அவர்கள், வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: