காபூல்: சுதந்திர தினத்தன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலின் வஜீர் அக்பர் கான், ஷெர்போர், 1 வது மேக்ரோரியன் மற்றும் ஷாஷ்டாரக் பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடந்ததாகவும் இதில் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.