சென்னை: மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூபாய் 7,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கு அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. ஏற்கனவே சாலைகளில் இயங்கக்கூடிய அனைத்து வாகனங்களையும் இயக்க தடை விதித்து, ஓட்டுநர்கள் வருமானம் இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். தற்போது சில நிபந்தனைகளுடன் வாகனம் இயக்க அரசு அனுமதி அளித்தாலும் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவது இல்லை.