ராமநாதபுரத்தில் சினிமா பாணியில் இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் கைது!!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சினிமா பாணியில் இரிடியம் வாங்கி தருவதாக கூறி 6 கோடி ரூபாய் மோசடி செய்த அதிமுக பிரமுகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் வனசங்கரியம்மன் கோவிலை சேர்ந்தவர் முனியசாமி. லண்டனில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக, கரூரை சேர்ந்த மதன்குமார் என்பவரிடம் அறிமுகம் செய்துகொண்ட முனியசாமி, விமானங்கள் வானத்தில் பறக்கும்போது கதிர்வீச்சை எதிர்கொள்ள பொருத்தப்படும் இரிடியம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இரிடியத்தை வீட்டில் வைத்திருப்பவர்கள் பலகோடி ரூபாய்க்கு அதிபராகலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். முனியசாமியின் ஆசை வார்த்தைகளை நம்பி மதன்குமார் சுமார் 6 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் 5 ஆண்டுகள் ஆன பிறகும் முனியசாமி சொன்னபடி இரிடியத்தை கொடுக்கவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மதன்குமார், ராமநாதபுரத்திற்கு வந்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர மறுத்த முனியசாமி தனது கூட்டாளிகளான அதிமுக பிரமுகர் சுகுமார் மற்றும் வீரபாபுவை வைத்து மதன்குமாரை மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மதன்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த முனியசாமி மற்றும் வீர பாபு தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து தற்போது அதிமுக பிரமுகர் சுகுமாரை மட்டும் கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: